Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம்

அக்டோபர் 25, 2019 07:56

கும்பகோணம்; கும்பகோணத்தில் ரத்த தானம் தினத்தை முன்னிட்டு அரசினர் கலைக்கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மற்றும் தன்னார்வ சங்கங்கள் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாமை கல்லூரி முதல்வர் சிவனேசன் தேசிய மாணவர் படை கமாண்டிங்  அலுவலர் நாயர்  நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி எட்வேர்ட் சாமி வேல் மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ரத்ததான முகாமில் கல்லூரி மாணவ-மாணவிகள் என்எஸ்எஸ் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்